* விதர்பா வேகத்தில்… மும்பை சோகத்தில்
நாக்பூரில் நடந்த மற்றொரு அரையிறுதியில் மும்பை அணிக்கு எதிராக ஆடிய விதர்பா அணி, முதல் நாள் ஆட்ட முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 308 ரன் எடுத்திருந்தது. 2ம் நாள் ஆட்டத்தை தொடர்ந்த விதர்பா, மீதமிருந்த 5 விக்கெட்டுகளையும் இழந்து 75 ரன் மட்டுமே சேர்த்தது. இதனால், 383 ரன்னுக்கு விதர்பாவின் ஆட்டம் முடிவுக்கு வந்தது. அதைத் தொடர்ந்து மும்பை அணி முதல் இன்னிங்சை துவங்கியது. துவக்க வீரர் ஆயுஷ் மாத்ரே 9 ரன்னில் அவுட்டாகி வெளியேறினார். மற்றொரு துவக்க வீரர் ஆகாஷ் ஆனந்த் கடைசி வரை அவுட்டாகாமல் 67 ரன்னுடன் களத்தில் இருந்தார். இருப்பினும் விதர்பா பந்து வீச்சாளர்களின் அற்புத பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வீழ்ந்து வெளியேறிய வண்ணம் இருந்தனர். நேற்றைய ஆட்ட நேர முடிவில் மும்பை அணி 7 விக்கெட் இழப்புக்கு 188 ரன் எடுத்து தடுமாறிக் கொண்டிருந்தது. விதர்பா அணியின் பார்த் ரெகாடே 16 ரன் தந்து 3 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். இன்று 3ம் நாள் ஆட்டம் தொடர்கிறது.
The post ரஞ்சி கோப்பை அரையிறுதி அகமதாபாத் மைதானத்தில் நிலைகொண்ட கேரள புயல்: 418 ரன் குவித்து அபாரம் appeared first on Dinakaran.
