இலங்கை மகளிருடன் முதல் டி20 இந்தியா அபார வெற்றி

விசாகப்பட்டினம்: இலங்கை மகளிருடனான முதல் டி20 போட்டியில் 8 விக்கெட் வித்தியாசதில் இந்திய மகளிர் அணி வெற்றிபெற்றுள்ளது. இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்துள்ள இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி, 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. முதல் போட்டி, விசாகப்பட்டினத்தில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற இந்தியா பந்து வீசியது. துவக்க வீராங்கனைகளில் ஒருவரான கேப்டன் சமாரி அத்தப்பட்டு, 15 ரன்னில் கிரந்தி கவுட் பந்தில் கிளீன் போல்டானார். பின் வந்த ஹாசினி பெரேரா 20 ரன்னில் வீழ்ந்தார்.

அதன் பின் ஹர்சிதா 21 ரன்னிலும், துவக்க வீராங்கனை விஷ்மி குணரத்னே 39 ரன்னிலும், இன்னிங்சின் கடைசி பந்தில் கவிஷா 6 ரன்னிலும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். 20 ஓவர் முடிவில் இலங்கை மகளிர், 6 விக்கெட் இழப்புக்கு 121 ரன் எடுத்திருந்தனர். இந்திய தரப்பில் கிரந்தி கவுட், அருந்ததி, சரணி தலா ஒரு விக்கெட் எடுத்தனர். இதையடுத்து, களம் இறங்கி இந்திய மகளிர் அணி 14.4 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 122 ரன்கள் எடுத்தது. இதனால் 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.

Related Stories: