அப்போது பேசிய நீதிபதி மஞ்சுளா, “அண்ணா பல்கலைகழகம் பாலியல் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில் தமிழ்நாடு அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் பாராட்டுக்குரியது. மற்றொரு வழக்கில் டி.ஐ.ஜி. அந்தஸ்தில் இருக்கக்கூடிய அதிகாரி என பாராமல் அவரை தற்காலிக பணி நீக்கம் செய்ய நடவடிக்கை எடுத்த தமிழக அரசின் செயல்பாடு பாராட்டுக்குரியது.மேலதிகாரிகள் மீது பாலியல் புகார் கொடுத்தால் நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை அதிகரித்துள்ளது. பெண்கள் அச்சமின்றி தைரியமாக வேலைக்குச் செல்லும் நிலையை உருவாக்க வேண்டும். வேலை செய்யும் இடங்களில் உள்புகார் குழு விவரங்களை
இணையத்தில் பதிவேற்ற வேண்டும். POSH சட்டத்தின் அடிப்படையில் விதிகள் குறித்த
அறிக்கையும் தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவிடுகிறது, “இவ்வாறு தெரிவித்தார்.
The post மேலதிகாரிகள் மீது பாலியல் புகார் கொடுத்தால் நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை அதிகரிப்பு : தமிழக அரசுக்கு ஐகோர்ட் பாராட்டு!! appeared first on Dinakaran.