அப்போது இருவரும் தற்போதைய அரசியல் நிலவரம் பற்றி பேசியுள்ளனர். குறிப்பாக மக்கள் நீதி மய்யத்துக்கு வழங்கப்பட வேண்டிய ராஜ்யசபா எம்பி பதவி பற்றி விவாதிக்கப்பட்டுள்ளது. அதாவது தமிழகத்தில் இருந்து தற்போது ராஜ்யசபா எம்பிக்களாக உள்ள மதிமுகவின் வைகோ, திமுகவின் அப்துல்லா, வில்சன், சண்முகம், அதிமுகவின் சந்திரசேகரன், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோரின் பதவிக்காலம் விரைவில் முடிவுக்கு வர உள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் 6 ராஜ்யசபா எம்பிக்கள் மீண்டும் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான தேர்தல் ஜுலை மாதம் நடைபெற வாய்ப்புள்ளது.
The post கமல்ஹாசனுடன் அமைச்சர்சேகர்பாபு திடீர் சந்திப்பு appeared first on Dinakaran.
