அதன்பேரில், தாட்கோ திட்டம் மூலம் ரூ.1.60 கோடி செலவில் புதிய மாணவர் விடுதி கட்டப்பட்டது. இந்த மாணவர் விடுதி கடந்த 2023ம் ஆண்டு இறுதியில் மாணவர் விடுதி திறக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த ஆண்டு முதல் இந்த விடுதிக்கு மாணவர்கள் சரிவர வராததால் விடுதி சில மாதங்களாகவே பூட்டியே கிடக்கிறது. இதனால், விடுதியை சுற்றி செடி, கொடிகள் படந்து, புதர்கள் மண்டி காணப்படுகிறது. எனவே, மாணவர்கள் இந்த விடுதியில் சேர்ந்து படிக்க முன்வர வேண்டும் எனவும், வீணாகும் கட்டிடத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
The post பெரியபாளையம் அருகே ரூ.1.60 கோடியில் கட்டப்பட்ட அரசு மாணவர் விடுதி திறப்பு விழா எப்போது? சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு appeared first on Dinakaran.
