ஹரிகிருஷ்ணன் தனது தாயாருடன் சிந்தாமணிபுதூரில் உள்ள வாடகை வீட்டில் வசித்து வந்தார்.
இவர், வீட்டில் சண்டை கோழிகளை வளர்த்து வந்தார். நேற்று முன்தினம் இரவு இருவரும் வழக்கம் போல் தூங்க சென்றனர். நேற்று அதிகாலை அவரது தாய் கண் விழித்து பார்த்த போது படுக்கையில் இருந்த ஹரிகிருஷ்ணனை காணவில்லை. வீடு முழுவதும் தேடி பார்த்தார். அப்போது சண்டை கோழிகள் வளர்க்கும் பகுதியில் உள்ள விட்டத்தில் அவர் தூக்கில் சடலமாக தொங்கியது தெரிய வந்தது. இதுகுறித்து சூலூர் போலீசார் வழக்கு பதிந்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
The post இரட்டை கொலை வழக்கு குற்றவாளி தூக்கிட்டு தற்கொலை appeared first on Dinakaran.
