கூடுதலாக ஒரு ரன் கூட எடுக்காமல் விஜய் சங்கர், அஜித்ராம் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தனர். அந்த அதிர்ச்சியை அடுத்து வந்த வீரர்களும் அள்ளித்தர தமிழ்நாடு தோல்வியை நோக்கி நகர்ந்தது. இடையில் அதிரடியாக விளையாடிய முகமது அலி 35 ரன் விளாசி ஆறுதல் அளித்தார். அவரும் ஆட்டமிழக்க காயம் காரணமாக கடைசி வரிசையில் களமிறங்கிய பாபா இந்திரஜித், ஆடாமலேயே ‘ரிட்டயர்ட் ஹர்ட்’ முறையில் வெளியேற தமிழ்நாடு அணியின் 2வது இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. திரிலோக் நாத் ஒரு ரன்னுடன் களத்தில் இருந்தார். அப்போது தமிழ்நாடு 189 ரன் மட்டுமே எடுத்திருந்தது. எனவே ஜார்கண்ட் 44 ரன் வித்தியாசத்தில் லீக் சுற்றில் 2வது வெற்றியை பெற்றது. இப்போட்டியில் தோற்றபோதும், தமிழ்நாடு அணிக்கு காலிறுதி வாய்ப்பு ஏற்கனவே உறுதியாகி உள்ளது. முதல் இன்னிங்சில் 6 விக்கெட் வீழ்த்திய ஜார்க்கண்ட் வீரர் உத்கர்ஷ் சிங், ஆட்ட நாயகன்.
The post ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட்: கடைசி போட்டியில் தோற்ற தமிழ்நாடு காலிறுதிக்கு தகுதி appeared first on Dinakaran.
