ஆண்டுதோறும் இங்கு நடைபெறும் உலகப் பொருளாதார மன்றத்தில் முந்தைய அதிமுக ஆட்சியின் 10 ஆண்டுகாலத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் எவரும் எட்டிக்கூடப் பார்க்கவில்லை. ஆனால் முதல்வரின் வழிகாட்டுதலில் தமிழ்நாடு அரசின் சார்பில் அதில் பங்கேற்று, உலக நாடுகளில் எவற்றுடன் தொழிற்கட்டமைப்பை மேம்படுத்தலாம் என்பதற்கான சந்திப்புகள், புதிய நிறுவனங்களுடனான கலந்துரையாடல்கள், தமிழ்நாட்டில் முதலீடு செய்வதற்கு உகந்த சூழல் உருவாக்கப்பட்டிருப்பது தொடர்பான விளக்கங்களை முன்னெடுத்துள்ளோம்.
கடந்த மே 2021 முதல் மூன்றாண்டுகளில் தமிழ்நாடு முன்னெடுத்த தொழிற்கொள்கையாலும், முதலீட்டாளர் சந்திப்புகள், உலக முதலீட்டாளர் மாநாடு ஆகியவற்றாலும் பன்னாட்டு-உள்நாட்டு நிறுவனங்களுடன் 893 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டதன் விளைவாக 10,07,974 ரூபாய் முதலீடுகள் ஈர்ப்பதற்கான வாய்ப்புகளும் 19,17,917 நேரடி வேலைவாய்ப்புகளுடன் 31,53,862 மொத்த வேலைவாய்ப்புகள் உருவாவதற்கான சூழலை அமைத்தது குறித்த விவரங்களை டாவோஸில் சந்தித்த உலக நாடுகளின் நிறுவனங்களிடம் விளக்கி, அவர்களைத் தமிழ்நாட்டில் தொழில்தொடங்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
‘டாவோஸ் நகரில் நடைபெற்ற உலகப் பொருளாதார அமைப்பின் 2025-ம் ஆண்டுக்கான கூட்டத்தில் திமுக அரசு சாதித்தது என்ன?’ என கேள்வி எழுப்பியிருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி. பொருளாதாரத்தில் தமிழ்நாடு என்ன சாதித்தது? என்பதை பிரதமருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுவின் அறிக்கையை கொஞ்சம் புரட்டிப் பாருங்கள்! இந்திய அளவில் இரண்டாவது பெரிய பொருளாதார மாநிலமாக தமிழ்நாடு வளர்ச்சி பெற்றிருப்பதை அறிந்து கொள்ளாமல் அற்பதனமாக அறிக்கை விட்டிருக்கிறார் பழனிசாமி.
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தமிழகத்தின் பங்கு 1960-61ல் 8.7 சதவிகிதமாக இருந்தது. அது 2023-2024-ல் 8.9 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. தனி நபர் வருவாயைப் பொறுத்தவரை, தேசிய சராசரியோடு ஒப்பிடுகையில் தமிழகத்தின் சராசரி 2023-2024-ல் 171.1 சதவிகிதமாக உயர்ந்துள்ளது முதல்வரின் ஆட்சித்திறனால் தமிழ்நாட்டின் புகழ்க்கொடி உலக அரங்கில் உயர்ந்து பறக்கிறது.
உலக நாடுகள் வியக்கும் வகையில் தமிழ்நாட்டின் தொழிற்கட்டமைப்பும், பெண்களின் பங்களிப்பும் திராவிட மாடல் அரசின் செயல்பாடுகள் டாவோஸ் உலகப் பொருளாதார மன்றத்தில் கவனம் ஈர்த்துள்ள நிலையில், மாநிலத்தின் மீது எவ்வித அக்கறையுமில்லாமல் வெறும் அவதூறுகளை அரைவேக்காட்டுத்தனமாக எங்கேயோ ‘கிண்டி’த் தருவதை ஆளுநரும் எதிர்க்கட்சித் தலைவரும் மென்று கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post மாநிலத்தின் மீது எவ்வித அக்கறையும் இல்லாமல் வெறும் அவதூறுகளை அரைவேக்காட்டுத்தனமாக எங்கேயோ ‘கிண்டி’த் தருவதை மென்று கொண்டிருக்கிறார்: எடப்பாடிக்கு அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா கடும் கண்டனம் appeared first on Dinakaran.
