இது தொடர்பாக புகார் எழுந்த நிலையில் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டது. பின்னர், அப்பெண்ணின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டு 46 பேரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அதிகாரி மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தேர்தல் நடத்தும் அதிகாரியாக செயல்பட்டு வந்த மணிஷ் மாற்றப்பட்டு புதிய அதிகாரியாக ஸ்ரீகாந்த் நியமிக்கப்பட்டுள்ளார். ஒசூர் மாநகராட்சி ஆணையராக உள்ள ஸ்ரீகாந்த் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடத்தும் அதிகாரியாக நியமித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
The post வேறு மாநிலத்தவரின் வேட்புமனு ஏற்பு.! ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அதிகாரி மணிஷ் மாற்றம்.! புதிய அதிகாரியாக ஸ்ரீகாந்த் நியமனம் appeared first on Dinakaran.