யு19 பெண்கள் உலக கோப்பை: ஸ்காட்லாந்தை சுருட்டிய ஆஸி

பாங்கி: ஐசிசி யு19 பெண்கள் உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியின் 2வது தொடர் நேற்று மலேசியாவில் தொடங்கியது. மொத்தம் 16 அணிகள் பங்கேற்றுள்ள இந்தப் போட்டியின் முதல் ஆட்டம் பாங்கி நகரில் நடந்தது. அதில் டி பிரிவு அணிகளான ஆஸ்திரேலியா-ஸ்காட்லாந்து பெண்கள் அணிகள் மோதின.முதலில் பந்து வீசிய ஆஸியின் வேகத்தை சமாளிக்க முடியாமல் 15.1ஓவரிலேயே ஸ்காட்லாந்து 48ரன்னில் சுருண்டது. அந்த அணியில் அதிகபட்சமாக எம்மா 12, சார்லோட் 10ரன் எடுத்தனர். மேலும் கேப்டன் நிமா முயூர் உட்பட 4 வீராங்கனைகளின் ஸ்கோர் 0. ஆஸி வீராங்கனைகளில் கேப்டன் லரோசா, பிரே ஆகியோர் தலா 3 விக்கெட் அள்ளினர்.

அதனையடுத்து 20ஓவர்களில் 49ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் ஆஸி களமிறங்கியது. அந்த அணி 6.4ஓவரில் ஒரு விக்கெட் மட்டும் இழந்து 49ரன் என்ற இலக்கை எளிதில் எட்டியது. அதனால் 80பந்துகள் எஞ்சியிருந்த நிலையில் ஆஸி 9 விக்கெட் வித்தியாசத்தில் முதல் வெற்றியை பதிவு செய்தது. ஆந்த அணியின் கேதி 29, லூசி 3ரன் எடுத்து களத்தில் இருந்தனர். மெக்கீன் 12 ரன்னில் ஆட்டமிழந்தார். அந்த விக்கெட்டை ஸ்காட்லாந்தின் நயமா கைப்பற்றினார். ஆட்டத்தின் சிறந்த வீராங்கனையாக ஆஸியின் பிரே தேர்வு செய்யப்பட்டார்.

The post யு19 பெண்கள் உலக கோப்பை: ஸ்காட்லாந்தை சுருட்டிய ஆஸி appeared first on Dinakaran.

Related Stories: