இதமான சூழல் மற்றும் தூறல் காரணமாக அருவிகளில் தண்ணீர் வரத்தும் சிறிதளவு அதிகரித்துள்ளது. மெயின் அருவியில் ஆண்கள் மற்றும் பெண்கள் பகுதியில் ஓரளவு நன்றாக தண்ணீர் வருகிறது. ஐந்தருவி, பழைய குற்றால அருவி ஆகியவற்றிலும் ஓரளவு தண்ணீர் நன்றாக வருகிறது. சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகரஜோதி தரிசனம் முடித்து திரும்புகின்ற பக்தர்களும் குற்றாலம் வருகை தருகின்றனர். சபரிமலை சீசன் நிறைவு பெற உள்ளதை முன்னிட்டு இன்னும் இரண்டு தினங்கள் மட்டுமே கோவிலில் நடை திறந்திருக்கும் என்பதால் விடுமுறையை பயன்படுத்தி பலரும் சபரிமலை கோவிலுக்கு செல்லுகின்றனர். இவ்வாறு செல்லும் பக்தர்களு குற்றாலத்தில் நீராடிச் செல்வது குறிப்பிடத்தக்கது.
The post பொங்கல் விடுமுறையை முன்னிட்டு குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர் appeared first on Dinakaran.
