*காளைகளை அழைத்து வரும் அதன் உரிமையாளருடன் ஒரு நபரும் சரியாக காலை 5 மணிக்கு வரவேண்டும்.
*முல்லைநகரில் உள்ள அனுமதிக்கப்படும் இடத்தில் காளைகளை வரிசைப்படுத்தி முறையாக கொண்டு வர வேண்டும்.
*அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 1,100 காளைகள் அவிழ்த்துவிட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு அவற்றிற்கான டோக்கன் வழங்கப்பட்டுள்ளது.
*1 முதல் 100 வரையிலான டோக்கன் பெற்றவர்கள் காலை 5 மணி முதல் 6 மணிக்குள் அனுமதிக்கப்படுவர்.
*அடுத்த ஒவ்வொரு மணி நேரத்திலும், 100 , 100 காளைகள் வீதம் என மாலை 4 மணி வரையில் அனுமதிக்கப்படுவர்.
*காளைகளை கொண்டு வருபவர்கள் மாவட்ட நிர்வாகத்தால் வழங்கப்பட்ட அனுமதி டோக்கன்கள் மற்றும் காளை உரிமையாளர்களின் ஆதார் அட்டையை கட்டாயம் கொண்டுவர வேண்டும்.
*காளையுடன் வரக்கூடிய 2 நபர்களும் மது அருந்தி வரக்கூடாது
இவ்வாறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
The post காளையுடன் வரக்கூடிய 2 நபர்களும் மது அருந்தி வரக்கூடாது : அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிக்கான விதிமுறைகள் வெளியீடு!! appeared first on Dinakaran.
