லாஸ் ஏஞ்சல்ஸ் நகர போலீஸ் அதிகாரி ராபர்ட் லூனா கூறுகையில், காட்டு தீயில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது. தீயில் சிக்கி சேதமடைந்த குடியிருப்புகள் பகுதிகளில் யாராவது சிக்கி உள்ளனரா என மோப்ப நாய்கள் உதவியுடன் தேடி வருகிறோம். காட்டு தீக்கு பலியானோர் எண்ணிக்கை உயருக்கூடும் என தெரிவித்தார். காட்டு தீயினால் 145 சதுர கிமீ பகுதிகள் முற்றிலும் அழிந்துள்ளன. வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக நிறுவனங்கள் உள்பட 12,000 கட்டிடங்கள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளன. 1.5 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
The post அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் கட்டுக்கடங்காமல் பரவி வரும் காட்டுத் தீ : 24 பேர் உயிரிழப்பு!! appeared first on Dinakaran.
