திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் யானை காந்திமதி உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழப்பு

நெல்லை: திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் யானை காந்திமதி உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தது. நெல்லையில் உள்ள நெல்லையப்பர் -காந்திமதி அம்மன் கோயிலில் உள்ள காந்திமதி யானைக்கு 56 வயது ஆகிறது. இந்நிலையில் அதிக எடை காரணமாக காந்திமதி யானையால் நிற்க முடியாமல் நேற்று முன்தினம் இரவில் இருந்து படுத்தே கிடக்கிறது.

உணவும் உட்கொள்ளவில்லை. மருத்துவர்கள் ஆலோசனைப்படி 2 கிரேன்கள் வரவழைக்கப்பட்டு யானைக்கு பெல்ட் அணிவித்து தூக்கி நிறுத்தப்பட்டது. எனினும் 5 நிமிடங்கள் மட்டுமே அதனால் நிற்க முடிந்தது. மீண்டும் படுத்துக்கொண்டது. இந்த நிலையில் இன்று காலை கோயில் யானை காந்திமதி உயிரிழந்தது.

The post திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் யானை காந்திமதி உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழப்பு appeared first on Dinakaran.

Related Stories: