குறிப்பாக, விராட் கோஹ்லி 9 இன்னிங்ஸ்களில் ஆடி வெறும் 190 ரன்கள் மட்டுமே எடுத்தது, அவரது ரசிகர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனால், கோஹ்லியும், ரோகித்தும் ரிடையர் ஆக வேண்டும் என ஏராளமான கிரிக்கெட் ஆர்வலர்கள் சமூக வலைதளங்களில் பதிவுகளை இட்டு தம் கோபத்தை வெளிப்படுத்தினர். இந்நிலையில், உத்தரப்பிரதேசத்தில் பிருந்தாவன் நகரில் அமைந்துள்ள பிரேமானந் மகராஜ் என்ற சாமியாரின் ஆசிரமத்துக்கு மனைவி அனுஷ்கா சர்மா மற்றும் தன் குழந்தைகளுடன் விராட் கோஹ்லி சென்று அவரது ஆசிகளை பெற்றார். கோஹ்லியும், அனுஷ்காவும் தங்கள் குறைகளை சாமியாரிடம் கூறி அவரது ஆலோசனைகளையும் பெற்றதாக தெரிகிறது. சாமியாரை கோஹ்லி சந்தித்து ஆசி பெற்ற வீடியோ சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு வைரல் ஆனது.
The post ஆஸி போட்டிகளில் சொதப்பலால் நெருக்கடி சாமியாரை சந்தித்து ஆசி பெற்ற கோஹ்லி: சமூக வலைதளங்களில் வீடியோ வைரல் appeared first on Dinakaran.
