கோரிக்கைகளை வலியுறுத்தி 1 லட்சம் கையெழுத்து இயக்கம்

சென்னை: தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் மு.வரதராஜன் வெளியிட்ட அறிக்கை: சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர் பணிக்காலத்தில் இறந்தால் அவர்களது வாரிசுகளுக்கு ஆண், பெண் இருபாலருக்கும் பணிவழங்கப்பட்டு வந்தது. தற்போது ஆண் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையிலான பணிவழங்க இயலாது என்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. எங்களுடைய கோரிக்கைகளை முதல்வர் கனிவுடன் பரிசீலித்து தக்க உத்தரவுகள் வழங்கிட வேண்டும். முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஒரு லட்சம் பேர் கையெழுத்திட்டு முதல்வருக்கு வருகிற 31ம் தேதிக்குள் அனுப்ப முடிவெடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது….

The post கோரிக்கைகளை வலியுறுத்தி 1 லட்சம் கையெழுத்து இயக்கம் appeared first on Dinakaran.

Related Stories: