இதையறிந்த அவர், ‘நாங்கள் இருவரும் நெருங்கிய நண்பர்கள்’ என்று சொன்னார். தற்போது அவர் அளித்துள்ள பேட்டியில், ‘நான் பிறந்தவுடன் என் தந்தை எனக்கு சூட்டிய பெயர், லட்சுமி. பிறகு என் தாயார் எனக்கு ஐஸ்வர்யா என்று பெயர் சூட்டினார். இரண்டு பெயர்களையும் இணைத்த நான், ஐஸ்வர்யா லட்சுமி ஆகிவிட்டேன். அன்று முதல் இன்றுவரை எனக்கு எந்தக் கஷ்டமும் கிடையாது. சினிமாவில் நடிக்க ஆரம்பித்த பிறகு என் லட்சிய கேரக்டர் என்ன என்று கேட்டனர். அப்படி எதுவும் இல்லை என்று சொன்னேன். தொடர்ந்து ஹீரோயினாக மட்டுமே நடிப்பேன்.
வில்லியாக நடிப்பது எனக்குப் பிடிக்காது. காஞ்சிபுரம் பட்டுப்புடவை, கேரளா சம்பிரதாய புடவைகள் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். அபிஷேக் பச்சன், விஜய் படங்கள் என்றால் ஆர்வத்துடன் பார்த்து ரசிப்பேன். கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கை மிகவும் பிடிக்கும். 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை அவரை மனதிற்குள் பூட்டி வைத்து காதலித்தேன். சினிமாவில் பிசியான பிறகு கிரிக்கெட் விளையாட்டைப் பார்த்து ரசிக்க நேரம் கிடைக்கவில்லை’ என்றார்.
The post ஐஸ்வர்யா லட்சுமியின் ரகசிய காதல் கதை appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.