சென்னை: இந்தியாவின் விடுதலைக்காக போராடிய நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் இந்திய தேசிய ராணுவத்தில் முதல் பெண் உளவாளியாக இருந்தவர், நீரா ஆர்யா. ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த அவர், உளவாளியாக பல நாடுகளுக்கு சென்று வந்துள்ளார். ஆங்கிலேயர்களுக்கு ஆதரவாக இருந்த தனது கணவரை அவர் சுட்டுக் கொன்றார். இதையடுத்து ஆங்கிலேய அரசாங்கத்தால் கைது செய்யப்பட்ட அவர், அந்தமான் சிறையில் அடைக்கப்பட்டார். இந்தியா சுதந்திரம் அடைந்த பின்பு, தனது மீதி வாழ்க்கையை பூ விற்கும் பெண்ணாக வாழ்ந்து முடித்தார். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இருக்கும் இடத்தை காட்டிக் கொடுக்க மறுத்ததால், அவரது மார்பகங்களை வெட்டி எறிந்ததாக சொல்லப்படுகிறது.
தற்போது நீரா ஆர்யாவின் வாழ்க்கை சம்பவங்களை மையப்படுத்தி இயக்குனரும், நடிகையுமான ரூபா அய்யர் ஒரு படம் உருவாக்குகிறார்.