இதனால் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் பீதியடைந்து அங்கேயே வாகனத்தை நிறுத்தினர்.
தகவலறிந்த சாத்தங்காடு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பாதுகாப்பு கருதி அந்த வழியாக வாகன போக்குவரத்தை தற்காலிகமாக நிறுத்தினர். இதையடுத்து டவர்லைன் பராமரிப்பு மின் பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்படி 5 தொழில்நுட்ப மின்ஊழியர்கள் விரைந்து வந்து, மின் இணைப்பை துண்டித்து, அறுந்து விழுந்த மின்கம்பியை மீண்டும் கோபுரத்தில் பொருத்தினர். பின்னர் வாகன போக்குவரத்து சீரானது.
The post மணலி நெடுஞ்சாலையில் உயரழுத்த மின்கம்பி அறுந்து விழுந்தது: போக்குவரத்து பாதிப்பு appeared first on Dinakaran.
