காபா மைதானத்தில் ஆஸி அணியை இந்திய அணி ஒரு முறை மட்டுமே வென்றுள்ளது. கடந்த 2021ல் காபா மைதானத்தில் நடந்த போட்டியின்போது, இந்திய விக்கெட் கீப்பரும் அதிரடி பேட்ஸ்மேனுமான ரிஷப் பண்ட் அவுட்டாகாமல் 89 ரன் எடுத்து முதல் வெற்றியை அணிக்கு பெற்று தந்தார். இந்த மைதானத்தில் இதுவரை, 112 ரன்களை அவர் எடுத்துள்ளார். காபாவில் அதிக ரன் எடுத்த இந்திய வீரராக மோத்கன்ஹல்லி லஷ்மிநரசு உள்ளார். அவர், காபாவில் 175 ரன் எடுத்துள்ளார். அந்த சாதனையை முறியடிக்க பண்ட்டுக்கு இன்னும் 63 ரன்களே தேவை.
அதேபோல், காபாவில் அதிக விக்கெட் எடுத்த இந்திய வீரர் என்ற சாதனையை, 2 போட்டிகளில் 8 விக்கெட்டுகளுடன் எரபள்ளி பிரசன்னா படைத்துள்ளார். ஷர்துல் தாக்குர் 7 விக்கெட் எடுத்துள்ளார். பிரசன்னாவின் சாதனையை முறியடிக்க இந்திய பந்து வீச்சாளர் முகம்மது சிராஜுக்கு இன்னும் 3 விக்கெட்டுகளே தேவை. காபாவில் ரிஷப் பண்ட்டும், சிராஜும் புதிய சாதனை படைப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
The post ஆஸியுடன் 3வது டெஸ்ட்டில் புதிய சாதனை படைப்பார்களா: ரிஷப் பண்ட், சிராஜுக்கு வாய்ப்பு appeared first on Dinakaran.
