ஜுப்லி ஹில்ஸ் பகுதியை காலி செய்கிறாரா?.. ஹைதராபாத்தில் புது வீடு வாங்கிய நடிகை சமந்தா?

நடிகை சமந்தா, ஹைதராபாத்தின் ஜெயபேரி ஆரஞ்ச் கவுன்டி பகுதியில் புதிய வீடு வாங்கியுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. நடிகை சமந்தா நடிக்கும் படங்கள் சமீபகாலமாக பெரிதாக வெற்றி பெறவில்லை. அவர் நடித்த யசோதா, சகுந்தலம் ஆகிய படங்கள் ஃபாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெறவில்லை. படம் தோல்வியை தழுவினாலும் அவரின் சம்பளம் மட்டும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ஹைதராபாத்தில் உள்ள ஜெயபேரி ஆரஞ்ச் கவுண்டி பகுதியில் கடற்கரையை ஒட்டி 6 ஸ்லாட்டுகளுடன் கூடிய 3 படுக்கறை கொண்ட புதிய வீட்டை வாங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.

ரூ.7.8 கோடி மதிப்புள்ள இந்த இரட்டை தள வீடு, 13 மற்றும் 14 வது தளத்தில் அமைந்திருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால், இதை அவர் உறுதிப்படுத்தவில்லை. நடிகர் நாகசைதன்யாவுடனான மணமுறிவுக்குப் பிறகு நடிகை சமந்தா முன்பு குடியிருந்த ஜுப்லி ஹில்ஸ் ஹவுஸ்ஸிலேயே வசித்துவந்த நிலையில் தற்போது ஹைதராபாத்தில் புதிய வீடு வாங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது குறிப்பிடத்தக்கது.

The post ஜுப்லி ஹில்ஸ் பகுதியை காலி செய்கிறாரா?.. ஹைதராபாத்தில் புது வீடு வாங்கிய நடிகை சமந்தா? appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: