என்னென்ன தேவை?
பச்சரிசி - 200 கிராம், துவரம்பருப்பு - 100 கிராம்,
சாம்பார் பொடி - 6 டீஸ்பூன், மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன், புளி - கோலி அளவு, கொத்தமல்லி - சிறிது, உப்பு, எண்ணெய் - தேவைக்கு, விருப்பமான காய்கள் கத்தரிக்காய் - 2, முருங்கைக்காய் - 1, பீன்ஸ், அவரைக்காய் - தலா 4, கேரட் - 2, பூசணிக்காய் - 1 துண்டு, தக்காளி - 2, வறுத்து அரைத்த கடலைப்பருப்பு, தனியா - தலா 1 டீஸ்பூன்.
தாளிக்க...பெருங்காயத்தூள் - சிறிது, சின்ன வெங்காயம் - 10, கடுகு - 1 டீஸ்பூன், காய்ந்தமிளகாய் - 2, கறிவேப்பிலை - சிறிது.
எப்படிச் செய்வது?அரிசி, பருப்பை சேர்த்து சுத்தம் செய்து கழுவி வேகவிடவும். பாதி வெந்ததும் காய்கள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வேகவிடவும். நன்றாக வெந்ததும் வெறும் கடாயில் வறுத்து அரைத்த கடலைப்பருப்பு, தனியா பொடியை சேர்க்கவும். சாம்பார் பொடி, உப்பு, புளிக்கரைசல் ஊற்றி கலந்து கதம்ப சாதமாக வரும்பொழுது தாளிக்க கொடுத்த பொருட்களை தாளித்து கொட்டி நன்றாக கிளறி கொத்தமல்லி தூவி சூடாக பரிமாறவும்.