சென்னை : சென்னை திருவொற்றியூரில் உள்ள தனியார் பள்ளியில் கடந்த 25ம் தேதி வாயுக்கசிவு ஏற்பட்டு 40க்கும் மேற்பட்ட மாணவிகள் மயக்கம் அடைந்த நிலையில், பள்ளிக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் மூலம் அங்கு காற்றில் பரவும் வாயு குறித்து சோதனை இன்று நடத்தப்படுகிறது.