வளி மண்டல சுழற்சி ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு

சென்னை; தென்னிந்திய கடலோரப் பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலை கொண்டு இருப்பதால், தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்யும் வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்துள்ளது.

குறிப்பாக தென்காசி, திருநெல்வேலி மாவட்ட மலைப் பகுதிகள், கன்னியாகுமரியில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. இந்நிலையில், தென்னிந்திய கடலோரப் பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளதால் இன்றும் ஓரிரு இடங்களில் மழை பெய்யும் வாய்ப்புள்ளது. சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும்.

The post வளி மண்டல சுழற்சி ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு appeared first on Dinakaran.

Related Stories: