பாஜ மாநில நிர்வாகி திடீர் ராஜினாமா

திருச்சி: தமிழக பாஜ சிறுபான்மை அணி மாநில துணைத்தலைவர் திடீரென ராஜினாமா செய்துள்ளார். ராஜினமா கடிதத்தை மாநில தலைவருக்கு அனுப்பியுள்ளார். திருச்சி தென்னூரை சேர்ந்தவர் ஏ.ஆர்.பாஷா. தமிழக பாஜ சிறுபான்மை அணி மாநில துணைத்தலைவர். சமூக ஊடகங்கள், செய்தி தொலைக்காட்சிகளில் நடக்கும் விவாதங்களில் கலந்து கொள்வார். இந்தநிலையில் ஏ.ஆர்.பாஷா, தனது பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார். கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்தில் இருந்தும் தன்னை விடுவித்து கொள்வதாக மாநில தலைவர் அண்ணாமலை, திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் ராஜசேகர் ஆகியோருக்கு நேற்றுமுன்தினம் கடிதம் அனுப்பியுள்ளார்.

The post பாஜ மாநில நிர்வாகி திடீர் ராஜினாமா appeared first on Dinakaran.

Related Stories: