இதற்காக 85 ஏக்கர் பரப்பளவில் மாநாட்டு திடல் அமைக்கப்பட்டுள்ளது. மாநாட்டில் 75 ஆயிரம் பேர் அமரும் வகையில் நாற்காலிகள் போடப்பட்டுள்ளது. மாநாடு மேடைக்கு அருகில் ஒரு பக்கம் பெருந்தலைவர் காமராஜர், பெரியார், அம்பேத்கர், விஜய் மற்றும் மறுபக்கம் தமிழன்னை, மூவேந்தர்களான சோழர், சேரர், பாண்டியன் மற்றும் விஜய் கட் அவுட்களும், திடலுக்கான நுழைவாயிலில் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகம், ஜார்ஜ் கோட்டை வடிவமைப்பில் அமைக்கப்பட்டு இரு பக்கமும் யானை இரு கால்களை தூக்கியபடி வரவேற்பதுபோல் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் நுழைவாயிலில் 100 அடி கொடி கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. மாநாடு தொடங்குவதற்கு முன், ரிமோட் மூலம் அந்த கொடி கம்பத்தில் அக்கட்சி தலைவர் விஜய் கொடி ஏற்றி வைத்து முதன்முறையாக அரசியல் சிறப்புரையாற்ற உள்ளார்.
* விஐபிக்களுக்கு கேரவன்
தவெக மாநாடு இன்று மாலை 6 மணிக்கு தொடங்குவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் நேற்றே மாநாட்டு திடலுக்கு விஜய் சென்றுவிட்டார். நேற்றிரவு மாநாட்டு திடலில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை ஆய்வு செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இன்று பிற்பகல் 2 மணி முதல் திரைத்துறை பிரபலங்கள் சார்பில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் மேடையில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காகவும், திரைத்துறையினர் உள்ளிட்ட விஐபிக்கள் தங்கவும் 6 கேரவன் வாகனங்கள் மாநாட்டு திடலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
* 5 லட்சம் ஸ்நாக்ஸ் பாக்கெட்
மாநாட்டிற்கு வருபவர்களுக்கு ஸ்நாக்ஸ் வழங்கிடும் வகையில் அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பிஸ்கட், மிக்சர், வாட்டர் பாட்டில் உள்ளடக்கிய சுமார் 5 லட்சம் ஸ்நாக்ஸ் பாக்கெட் பேக்கிங் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதனை மாநாட்டிற்கு வருபவர்களுக்கு வழங்க உள்ளனர்.
The post விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் தவெக மாநாடு இன்று நடக்கிறது: நடிகர் விஜய் முதல்முறையாக அரசியல் சிறப்புரை: ஐஜி தலைமையில் 4,500 போலீஸ் பாதுகாப்பு appeared first on Dinakaran.