தவெகவினர் பாமகவில் ஐக்கியம்

திண்டிவனம்: தவெக முதல் மாநாடு இன்று நடக்க உள்ள நிலையில், கடலூர் மாவட்டம் நெய்வேலி, காடாம்புலியூர் ஊராட்சியை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தவெகவில் இருந்து விலகி அக்கட்சி மாவட்ட நிர்வாகி தமிழரசன் தலைமையில், திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாசை நேற்று சந்தித்து பாமகவில் இணைந்தனர். இது குறித்து தவெக மாவட்ட நிர்வாகி தமிழரசன் கூறும்போது, தவெகவின் நிலைபாடுகள், செயல்கள் பிடிக்காததால் அக்கட்சியிலிருந்து விலகி பாமகவில் இணைந்ததாக தெரிவித்தார். பாமக கவுரவ தலைவர் ஜி.கே.மணி எம்எல்ஏ, மாநில பொருளாளர் திலகபாமா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

The post தவெகவினர் பாமகவில் ஐக்கியம் appeared first on Dinakaran.

Related Stories: