ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல் ஆம்னி பஸ்களின் கட்டணத்தை கட்டுப்படுத்த வேண்டும்

சென்னை: பண்டிகை நாட்களில் தனியார் பஸ்களில் வசூலிக்கும் கட்டணத்தை கட்டுப்படுத்த வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தனியார் வசம் 7,764 பஸ்கள் மட்டுமே உள்ள நிலையில், மிக பெரிய நிறுவனங்களாக விளங்கும் அரசு போக்குவரத்து கழகங்கள் தனியார் பஸ்களை எடுத்து இயக்க போகின்றன என்பது ஏற்புடையதல்ல. இது கண்டனத்திற்குரியது. மேலும், தனியார் பஸ்களின் நிலைமை, அந்த ஓட்டுநர்களுக்கு உள்ள அனுபவம் ஆகியவை குறித்து ஒரு தெளிவு இல்லாமல், தனியார் பஸ்களை எடுத்து இயக்குவது ஆபத்தானது.

எனவே, அரசு போக்குவரத்து கழகங்கள் வசம் உள்ள அனைத்து பஸ்களையும் முழு வீச்சில் இயக்கி, மக்களின் உயிருக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும். மேலும் தனியார் பஸ்களில் வசூலிக்கும் கட்டணத்தை கட்டுப்படுத்த வேண்டும். அரசு போக்குவரத்து கழகங்களை தனியார் மயமாக்கும் போக்கை கைவிட வேண்டும். பஸ்களின் எண்ணிக்கை, புதிய பஸ்களின் எண்ணிக்கை, புதுப்பிக்கப்பட்ட பஸ்களின் எண்ணிக்கை, கழிவு செய்யப்பட்ட பஸ்களின் எண்ணிக்கை, ஓட்டுநர்களின் எண்ணிக்கை குறித்து அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

The post ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல் ஆம்னி பஸ்களின் கட்டணத்தை கட்டுப்படுத்த வேண்டும் appeared first on Dinakaran.

Related Stories: