பரமக்குடி அருகே ரயில் பிரேக் ஷூ கழன்று வந்து தாக்கியதில் விவசாயி பலி

ராமநாதபுரம்: பரமக்குடி அருகே, ரயிலில் இருந்து பிரேக் ஷூ கழன்று பறந்து வந்து தாக்கியதில் விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து ராமநாதபுரம் ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே, சத்திரக்குடியை அடுத்த எட்டிவயல் கிராமத்தை சேர்ந்தவர் சண்முகவேல் (61). விவசாயி. இவர், அப்பகுதியில் உள்ள தனது வயலுக்கு செல்வதற்காக, இன்று காலை ரயில்பாதை அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது ராமநாதபுரத்தில் இருந்து மதுரை சென்ற ரயிலின் பிரேக் ஷூ திடீரென கழன்று பறந்து வந்து சண்முகவேலின் முகத்தில் தாக்கியது. இதில், படுகாயம் அடைந்த அவர், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து வந்த சத்திரக்குடி போலீசார் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

The post பரமக்குடி அருகே ரயில் பிரேக் ஷூ கழன்று வந்து தாக்கியதில் விவசாயி பலி appeared first on Dinakaran.

Related Stories: