காரைக்கால் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு இலவச சைக்கிள்கள்

 

காரைக்கால்,அக்.26: காரைக்கால் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு இலவச சைக்கிள்களை அமைச்சர் திருமுருகன் வழங்கினார்.புதுச்சேரி கல்வித்துறை சார்பாக காரைக்கால் தந்தை பெரியார் அரசு மேல்நிலைப்பள்ளியில் (இணைப்பு) இலவச சைக்கிள்கள் வழங்கும் விழா நேற்று பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் புதுச்சேரி குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் திருமுருகன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு இலவச சைக்கிள்களை வழங்கினார். மேலும் கடந்த ஆண்டு ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய சைக்கிள்களை தற்போது வழங்கினார். இவ்விழாவில் கல்வித்துறை முதன்மை அதிகாரி விஜய மோகனா, பள்ளியின் ஆசிரியர்கள் மாணவர்கள்,முக்கியஸ்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

The post காரைக்கால் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு இலவச சைக்கிள்கள் appeared first on Dinakaran.

Related Stories: