பெண்ணிடம் தாலி செயின் பறிப்பு

 

மரக்காணம், அக்.26: மரக்காணம் அருகே கந்தாடு ஊராட்சிக்குட்பட்ட முதலியார் பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துவேல் (36). வழக்கறிஞர். இவரது மனைவி நந்தினி(31) தனக்கு சொந்தமான ஸ்கூட்டியில் தனது வீட்டில் இருந்து ஆலத்தூர் கிராமத்திற்கு சென்றுள்ளார். மரக்காணம் அடுத்த குறும்புறம் என்ற இடத்தில் சென்றபோது விலை உயர்ந்த பைக்கில் அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் எதிரில் வந்துள்ளனர். அவர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் நந்தினியின் கழுத்தில் இருந்த 5சவரன் தாலி செயினை பறித்துக் கொண்டு தப்பி சென்றுள்ளனர்.

அப்போது அங்கிருந்தவர்கள் மோட்டார் பைக்கில் தப்பிய இருவரையும் துரத்தி சென்றனர். இது குறித்து மரக்காணம் காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. மரக்காணம் போலீசார் ஈசிஆர் சாலையில் கண்காணித்து வந்தனர். அப்போது கோணவாயன் குப்பம் பகுதியில் இருவரும் வந்த பைக்கை நிறுத்திவிட்டு தப்பி ஓடியுள்ளனர். பைக்கை போலீசார் காவல் நிலையத்திற்கு எடுத்து வந்து யாருடையது என்று விசாரித்தனர். அதில் அந்த பைக், பெண்ணிடம் செயின் பறித்தவர்கள் ஓட்டி வந்தது என்பது தெரிய வந்தது.

The post பெண்ணிடம் தாலி செயின் பறிப்பு appeared first on Dinakaran.

Related Stories: