இதற்கிடையே, தெற்கு கேரள கடற்கரையை ஒட்டிய தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளின் மேல் ஒரு கீழடுக்கு சுழற்சி தற்போது நிலை கொண்டுள்ளது. மேலும் குமரிக் கடல் பகுதியிலும் வளி மண்டல காற்று சுழற்சி உருவாகியுள்ளதால் தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்யும். இதே நிலை 27ம் தேதி முதல் 31ம் தேதி வரை நீடிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையில் பொதுவாக மேகமூட்டம் காணப்படும்.
The post 9 மாவட்டங்களில் கனமழை பெய்யும் appeared first on Dinakaran.