9 மாவட்டங்களில் கனமழை பெய்யும்

சென்னை: வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரம் அடைந்துள்ளதை அடுத்து 9 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. அதன் காரணமாக திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, திருப்பூர், கரூர், திருச்சி, நாமக்கல், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்தது.

இதற்கிடையே, தெற்கு கேரள கடற்கரையை ஒட்டிய தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளின் மேல் ஒரு கீழடுக்கு சுழற்சி தற்போது நிலை கொண்டுள்ளது. மேலும் குமரிக் கடல் பகுதியிலும் வளி மண்டல காற்று சுழற்சி உருவாகியுள்ளதால் தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்யும். இதே நிலை 27ம் தேதி முதல் 31ம் தேதி வரை நீடிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையில் பொதுவாக மேகமூட்டம் காணப்படும்.

The post 9 மாவட்டங்களில் கனமழை பெய்யும் appeared first on Dinakaran.

Related Stories: