தங்கம் விலை பவுனுக்கு ரூ.80 அதிகரிப்பு

சென்னை: தங்கம் விலை நேற்று பவுனுக்கு ரூ.80 அதிகரித்தது. தங்கம் விலை இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்ட நிலையில், கடந்த 16ம் தேதி ஒரு சவரன் ரூ.57 ஆயிரத்தை கடந்து புதிய உச்சத்தை தொட்டது. அதன் பின்னரும் தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகத்திலேயே பயணித்தது. இதனால் கடந்த 19ம் தேதி ஒரு பவுன் ரூ.58 ஆயிரம் என்ற நிலையையும் தாண்டியது. அதோடு நிற்காமல் தொடர்ந்து தங்கம் விலை உயர்ந்து ெகாண்டே உள்ளது.

அந்த வகையில் கடந்த 23ம் தேதி தங்கம் விலை பவுனுக்கு ரூ.320 உயர்ந்து ஒரு பவுன் ரூ.58,720க்கு விற்பனை செய்யப்பட்டது. இதன் மூலம் தங்கம் விலை மீண்டும் வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியது. நேற்று முன்தினம் தங்கம் விலை அதிரடியாக குறைந்து சற்று ஆறுதல் அளித்தது. அதாவது, கிராமுக்கு ரூ.55 குறைந்து ஒரு கிராம் ரூ.7285க்கும், பவுனுக்கு ரூ.440 குறைந்து ஒரு பவுன் ரூ.58280க்கும் விற்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று தங்கம் விலை மேலும் சற்று உயர்ந்தது. அதன்படி, தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ஒரு கிராம் ரூ.7295க்கும், பவுனுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு பவுன் ரூ.58,360க்கும் விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.3 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.107க்கும் விற்பனையானது.

The post தங்கம் விலை பவுனுக்கு ரூ.80 அதிகரிப்பு appeared first on Dinakaran.

Related Stories: