கட்டிட தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

திண்டுக்கல், அக். 26: ஆத்தூர் அருகே என்.பஞ்சம்பட்டி பிரிவை சேர்ந்தவர் ராகுல் (26). கட்டிட தொழிலாளி. இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான இவர், வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். இதனை அவரது பெற்றோர் கண்டித்ததாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த நிலையில் இருந்த ராகுல் சம்பவத்தன்று அவரது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரில் திண்டுக்கல் தாலுகா எஸ்ஐ பாலசுப்பிரமணி, சிறப்பு எஸ்ஐ வனராஜன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கட்டிட தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை appeared first on Dinakaran.

Related Stories: