3 பேர் படுகாயம்

வேடசந்தூர், அக். 26: கரூர் மாவட்டம் பள்ளபட்டியை சேர்ந்த ஜாசிம் அகமது தனது மனைவி, மகளுடன் நேற்று காலை திண்டுக்கல் வந்து விட்டு மாலையில் மீண்டும் ஊருக்கு கிளம்பினர். காரை ஜாசிம் அகமது ஓட்டி சென்றார். திண்டுக்கல்- கரூர் தேசிய நான்கு வழிச்சாலை வேடசந்தூர் அருகே லட்சுமணம்பட்டி பகுதியில் வந்த போது கட்டுப்பாட்டை இழந்த கார் சென்டர் மீடியனில் மோதி சாலையின் மறுபுறம் சென்று விபத்திற்குள்ளானது. இதில் படுகாயமடைந்த 3 பேரையும் சிகிச்சைக்காக திண்டுக்கல் ஜிஹெச்சிற்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வேடசந்தூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

The post 3 பேர் படுகாயம் appeared first on Dinakaran.

Related Stories: