உணவில் விஷம் வைத்து 19 தெருநாய்கள் கொலை : திண்டுக்கல்லில் பரபரப்பு

திண்டுக்கல் : திண்டுக்கல்லில் உணவில் விஷம் வைத்து 19 தெருநாய்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திண்டுக்கல் மாநகராட்சி 40வது வார்டுக்குட்பட்ட பூச்சிநாயக்கன்பட்டி பகுதியில் நேற்று காலை தூய்மை பணியாளர்கள் வழக்கம்போல் வேலைக்கு சென்றுள்ளனர். அப்போது அப்பகுதியில் ஆங்காங்கே 19 தெருநாய்கள் மர்மமான முறையில் இறந்து கிடந்தன.

இதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள், இதுகுறித்து சுகாதார ஆய்வாளருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த சுகாதார ஆய்வாளர், இதுபற்றி விலங்குகள் நல வாரியத்தினருக்கு தகவல் தெரிவித்தார். பின்னர் கால்நடை மருத்துவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து இறந்து கிடந்த நாய்களை பிரேத பரிசோதனை செய்தனர். இதில் நாய்களுக்கு உணவில் விஷம் கலந்து கொன்று இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து இறந்து கிடந்த நாய்கள் அப்புறப்படுத்தப்பட்டன.

விஷம் கலந்த உணவை நாய்களுக்கு வைத்த மர்ம நபரை கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்க காவல் துறையினரிடம் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

The post உணவில் விஷம் வைத்து 19 தெருநாய்கள் கொலை : திண்டுக்கல்லில் பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: