நீலகிரி: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு நவம்பர் 29ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கோடநாடு வழக்கை நவ.29க்கு ஒத்திவைத்து உதகை குடும்ப நல நீதிமன்ற நீதிபதி லிங்கம் உத்தரவிட்டுள்ளார். வழக்கு தொடர்பாக கூடுதல் சாட்சிகளை விசாரிக்க வேண்டும் என்பதால் ஒத்திவைத்துள்ளதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.