தூத்துக்குடி கூட்டுறவு பண்டக சாலையில் பட்டாசு விற்பனை துவக்கம்

தூத்துக்குடி, அக். 24: தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையில் தீபாவளியை முன்னிட்டு பட்டாசுகள் விற்பனை தொடங்கி உள்ளது. இதற்கான சிறப்பு விற்பனை பிரிவை கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல இணை பதிவாளர் நடுக்காட்டுராஜா துவக்கி வைத்து முதல் விற்பனையை தொடங்கி வைத்தார். விழாவில் தூத்துக்குடி சரக துணை பதிவாளர் சக்தி பெமிலா, பண்டகசாலையின் செயலாட்சியர் பாலமுருகன், கூட்டுறவு சார்பதிவாளர் சாம் டேனியல் ராஜ், பொது மேலாளர் கந்தசாமி, மேலாளர் கிருஷ்ணன் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

இங்கு சிறு குழந்தைகளுக்காக பாதுகாப்பான பட்டாசுகளின் அணிவகுப்பில் சமோசா, டைனோசர், பாப் சோவர், ஸ்நேக் பீட்ஸ், சாக்கலேட் சக்கர்ஸ், ரோபோட், லிட்டில் ஹாட்ஸ், ஸ்ரைக் போர்ஸ், மிக்கி ரோப், கிண்டர் ஜாய் உள்ளிட்ட புதிய ரக பட்டாசுகள் விற்பனைக்கு வந்துள்ளன. சிவகாசி பட்டாசுகள் நிறுவன விலையில் இருந்து 5 சதவீத தள்ளுபடியும் அளிக்கப்படுகிறது. எனவே பொதுமக்கள் பட்டாசுகளை வாங்க கூட்டுறவு பண்டகசாலையை அணுகலாம் என்று பண்டகசாலையின் மேலாண்மை இயக்குநர் பாலமுருகன் கேட்டுக் கொண்டுள்ளார்.

The post தூத்துக்குடி கூட்டுறவு பண்டக சாலையில் பட்டாசு விற்பனை துவக்கம் appeared first on Dinakaran.

Related Stories: