ஆலோசனைக் கூட்டம்

ஆண்டிபட்டி, அக். 24: ஆண்டிபட்டியில் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. ஏற்கனவே இந்த அமைப்பை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட பணியாளர்கள் கடந்த 3 நாட்களாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அரசுக்கு தங்கள் கோரிக்கை வலியுறுத்தும் வகையில், ஆலோசனைக் கூட்டம், ஆண்டிபட்டி தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் அருணகிரி தலைமை தாங்கினார். மாநில பொதுச் செயலாளர் காமராஜ் பாண்டியன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் சரவணன், மாவட்ட துணை தலைவர்கள் காளிப்பாண்டியன், செல்லாண்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post ஆலோசனைக் கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: