புகையிலை பொருள் பதுக்கியவர் கைது

போடி, அக். 24: போடி தாலுகா காவல் நிலைய எஸ்ஐ மணிகண்டனுக்கு, அந்தப்பகுதி கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து விற்கப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீசார் போடி அருகே ராசிங்காபுரம், ராஜகாளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சுந்தரேசன் மகன் லோகேஷ்(26) என்பவர் நடத்திவரும் பெட்டிக்கடையில் சோதனையிட்டனர். அங்கு அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. கடையிலிருந்து 322 புகையிலை பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், லோகேஷை கைதுசெய்து விசாரித்து வருகின்றார்.

The post புகையிலை பொருள் பதுக்கியவர் கைது appeared first on Dinakaran.

Related Stories: