தொண்டி அரசு பள்ளியில் கலைத் திருவிழா போட்டி

தொண்டி, அக்.24: தொடக்கப் பள்ளிகளுக்கான வட்டார அளவிலான கலைத் திருவிழா போட்டி தொண்டி, நம்புதாளை உள்ளிட்ட அரசுப் பள்ளிகளில் நடைபெற்றது. நடப்பு ஆண்டுக்கான 1 முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் மாணவர்களுக்கான கலைத் திருவிழா போட்டிகள் திருவாடானை ஒன்றியத்திற்கு உட்பட்ட 10 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் நடைபெற்றது.

ஒன்று மற்றும் இரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ஐந்து வகையான போட்டிகளும், 3 முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 8 வகையான போட்டிகளும் நடத்தப்பட்டது. இப்போட்டிகளில் 1,110 மாணவர்கள் கலந்து கொண்டனர். நடுவர்களாக அரசு மற்றும் அரசு உதவி பெறக்கூடிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் செயல்பட்டனர். ஒவ்வொரு குறுவள மையத்தில் இருந்தும் ஒவ்வொரு போட்டியிலும் முதலிடம் பெற்ற மாணவர்களை தேர்வு செய்து வட்டார அளவிலான போட்டிகளுக்கு பரிந்துரை செய்தனர். வட்டார கல்வி அலுவலர் புல்லானி, ஒன்றிய மேற்பார்வையாளர் கார்த்திக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

The post தொண்டி அரசு பள்ளியில் கலைத் திருவிழா போட்டி appeared first on Dinakaran.

Related Stories: