லாரி மோதி டிரைவர் பலி

பரமக்குடி,அக்.24: பரமக்குடி அருகே கார்,லாரி நேருக்கு நேர் மோதியதில், சம்பவ இடத்திலேயே கார் டிரைவர் பலியானார். விருதுநகரை சேர்ந்தவர் கனி(27). கார் ஓட்டுநர். இவர், நேற்று காலை விருதுநகரில் இருந்து ராமநாதபுரத்திற்கு 3 பேரை காரில் அழைத்து வந்துள்ளார்.

பரமக்குடி அருகே இதம்பாடல் அருகே கார் வந்தபோது, ராமநாதபுரத்தில் இருந்து பரமக்குடியை நோக்கி வந்த லாரி மீது மோதியது. இதில் கார் ஓட்டுநர் கனி(27) படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். காரில் பயணம் செய்த 3 பேர் படுகாயம் அடைந்து, பரமக்குடி மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சத்திரக்குடி போலீசார், லாரி ஓட்டுநர் தினைக்குளத்தைச் சேர்ந்த ஜான்ரோஸ்(55) மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post லாரி மோதி டிரைவர் பலி appeared first on Dinakaran.

Related Stories: