சூதாடிய 4 பேர் கைது

திருப்பூர், அக்.24: திருப்பூர், மத்திய போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பணம் வைத்து சூதாட்டம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, கே.வி.ஆர் நகர், கொடிக்கம்பம் அருகே உள்ள பிள்ளையார் கோயில் பின்புறம் சிலர் கூட்டமாக அமர்ந்திருந்தனர்.

அவர்களை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் கே.வி.ஆர் நகரை சேர்ந்த ஆனந்தகுமார் (27), சந்தைபேட்டை பகுதியை சேர்ந்த ராஜபாண்டி (29), சுரேஷ் (48), கனகராஜ் (45), என்பதும், அவர்கள் அங்கு பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து 4 பேரையும் கைது செய்தனர்.

The post சூதாடிய 4 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: