கஞ்சா விற்ற வாலிபர் கைது

திருப்பூர், அக்.24: திருப்பூர் மத்திய போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி, மத்திய போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது, மங்கலம் ரோடு, ஆண்டிபாளையம் ஜங்சன் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த வாலிபரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் அவர், முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தார். தொடர்ந்து அவரிடம் சோதனை செய்த போது 100 கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்தது. அவர், பீகார் மாநிலத்தை சேர்ந்த மந்தோஷ் குமார் (22), என்பதும், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. தொடர்ந்து மத்திய போலீசார் வழக்கு பதிவு செய்து மந்தோஷ்குமாரை கைது செய்தனர்.

The post கஞ்சா விற்ற வாலிபர் கைது appeared first on Dinakaran.

Related Stories: