இந்த மனுக்கள் தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வில் விசாரிக்கப்படுகிறது. கடந்த 17ம் தேதி வழக்கின் இறுதி விசாரணை தொடங்கியது. வரும் நவம்பர் 10ம் தேதி தலைமை நீதிபதி சந்திரசூட் பதவிக்காலம் முடிந்து ஓய்வு பெறுகிறார். வரும் 26ம் தேதி தீபாவளி விடுமுறை விடப்பட்டு நவம்பர் 4ம் தேதி நீதிமன்றம் மீண்டும் திறக்கப்படும். எனவே முக்கியமான இந்த விவகாரத்தில் நேரமின்மையை கருத்தில் கொண்டு, வழக்கை வேறு அமர்விற்கு மாற்றி 4 வாரத்திற்கு பிறகு பட்டியலிட தலைமை நீதிபதி நேற்று உத்தரவு பிறப்பித்தார்.
The post நவ.10ல் தலைமை நீதிபதி ஓய்வால் திருமண பலாத்கார வழக்கு 4 வாரத்திற்கு ஒத்திவைப்பு: உச்ச நீதிமன்றம் அறிவிப்பு appeared first on Dinakaran.