இதனால் ஏமாற்றம் அடைந்த மானுஷா மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் புகார் அளித்தார். வழக்கு விசாரணையில் ஆஜரான தபால் துறை 50 காசு போன்ற பைசாக்களில் வரும் கட்டணம் ரூ.1 ஆக மாறும் வகையில் தபால் துறையின் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறினார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நுகர்வோர் ஆணையம் தபால் துறைஅதிக கட்டணம் வசூல் செய்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கூறியது. இதனை அடுத்து மானுஷாவுக்கு இழப்பீடாக ரூ.10 ஆயிரமும், வழக்கு செலவுக்காக ரூ.5 ஆயிரம் வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக வசூலிக்கப்பட்ட 50 காசுகளை திரும்ப வழங்கவும் தபால் துறைக்கு ஆணையிடப்பட்டுள்ளது.
The post வாடிக்கையாளருக்கு 50 பைசாவை திருப்பித் தராத விவகாரம்: அஞ்சல் துறைக்கு நுகர்வோர் நீதிமன்றம் ரூ.15,000 அபராதம் appeared first on Dinakaran.