மண்டபம் பகுதியில் குடியிருப்புகளில் மழைநீர் தேக்கம்

 

மண்டபம்,அக்.23: மண்டபம் பகுதியைச் சுற்றி நேற்று காலையில் கனமழை பெய்ததால், குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் தேக்கம் அடைந்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மண்டபம் நகர், மண்டபத்தைச் சுற்றியுள்ள மறைக்காயர் பட்டிணம் ஊராட்சி, வேதாளை ஊராட்சி, சாத்தக்கோன்வலசை ஊராட்சி மற்றும் மண்டபம் கேம்ப் மற்றும் இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாம், முனைக்காடு, காந்திநகர் ஆகிய பகுதிகளில் நேற்று காலையில் 6 மணி முதல் 8 மணி வரை 2 மணி நேரம் தொடர்ந்து கனமழை பெய்தது.

இதில் பல்வேறு பகுதிகளில் சாலைகளிலும், குடியிருப்பு பகுதிகளிலும் மழைநீர் தேக்கமடைந்தது. இதனால் பொதுமக்கள் வெளிவர முடியாமலும், கூலித்தொழிலாளிகள் வேலைக்கு செல்ல சாலையில் நடக்க முடியாமல் நேற்று அவதிப்பட்டனர். அதன் ஒரு பகுதியாக மண்டபம் முனைக்காடு பகுதியில் பெய்த கனமழையால் மழை நீர் தேங்கியது.

The post மண்டபம் பகுதியில் குடியிருப்புகளில் மழைநீர் தேக்கம் appeared first on Dinakaran.

Related Stories: