குன்னூர் காட்டேரி பூங்காவில் கழிப்பறையை சுற்றுலா பயணிகள் வசதிக்காக திறக்க கோரிக்கை

 

குன்னூர், அக்.23: குன்னூர் காட்டேரி பூங்காவில் புதிதாக கட்டப்பட்ட கழிப்பறையை சுற்றுலா பயணிகளின் வசதிக்காக திறக்க வேண்டுமென்று கோரிக்கைகள் எழுந்துள்ளது. நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளை வரவேற்கும் விதமாக குன்னூர் மலைப்பாதையின் நுழைவு காட்டேரி பூங்கா அமைந்துள்ளது. இந்த பூங்காவில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக இருந்து வந்தாலும், புதுமண தம்பதியர்களின் போட்டோ ஷூட்களால் தினந்தோறும் பூங்கா களைகட்ட துவங்கியுள்ளது.

இவ்வாறு வரும் சுற்றுலா பயணிகளுக்கு போதுமான கழிப்பறை வசதி இல்லாததால் கூடுதலாக தோட்டக்கலைத்துறை சார்பாக புதிதாக கழிப்பறை கட்டப்பட்டது. ஆனால் இதன் பணிகள் நிறைவடைந்து, பல மாதங்கள் ஆகியும் இதுவரை திறக்கப்படவில்லை. எனவே சுற்றுலா பயணிகளின் வசதிக்காக விரைவில் இந்த கழிப்பறையை பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளன.

The post குன்னூர் காட்டேரி பூங்காவில் கழிப்பறையை சுற்றுலா பயணிகள் வசதிக்காக திறக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: