வாகனங்களுக்கு அபராதம் விதிப்பு

 

பரமக்குடி,அக்.23: பரமக்குடி பேருந்து நிலையம் அருகே போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களுக்கு போக்குவரத்து போலீசார் லாக் போட்டு அபராதம் விதித்தனர். மாவட்டத்தில் இரண்டாவது பெரிய நகரமாக பரமக்குடி விளங்கி வருகிறது. பரமக்குடியை சுற்றிலும் 400க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் அதிகமாக வந்து செல்கின்றனர். அதிக மக்கள் தொகை கொண்ட இந்நகர் பகுதியில் பேருந்து நிலையம், ஓட்டப்பாலம் ஆற்றுப்பாலம், பெரிய கடை, பஜார் வீதி உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்துக்கு இடையூறாக இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்டு கடுமையான போக்குவரத்து நெரிசல் உருவாகியுள்ளது.

இந்நிலையில் நேற்று போக்குவரத்து காவல் ஆய்வாளர் வெங்கடேசன் தலைமையில் போக்குவரத்து போலீசார் சாலையின் இருபுறமும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களுக்கு லாக் போட்டு அபராதம் விதித்தனர். மேலும், சாலையோரம் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த சரக்கு வாகனங்கள் கார்கள் போன்றவற்றுக்கு அபராதம் விதித்தனர். தொடர்ந்து போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பொதுமக்கள் போக்குவரத்து விதிமுறைகளை மதித்து செயல்பட வேண்டும் எனவும் காவல்துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது.

The post வாகனங்களுக்கு அபராதம் விதிப்பு appeared first on Dinakaran.

Related Stories: