மேலூர் அருகே மாநில செஸ் போட்டிக்கு அரசு பள்ளி மாணவர்கள் தேர்வு

 

மேலூர், அக். 23: மேலூர் அருகே உள்ள அரசு பள்ளி மாணவர்கள் மாவட்ட அளவில் செஸ் போட்டியில் வெற்றி பெற்று, மாநில போட்டிக்கு 7வது முறையாக தேர்வு பெற்றனர். பள்ளி கல்வி துறை சார்பில் வருவாய் மாவட்ட அளவிலான செஸ் போட்டி மதுரை நாகமலை புதுக்கோட்டையில் உள்ள ஜெயராஜ் நாடார் மேல்நிலை பள்ளியில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இப்போட்டியில் குறுவட்ட அளவில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்ற மாணவர்கள் விளையாடினர்.

இதில் 11 வயதுக்குட்பட்டோருக்கான பெண்கள் பிரிவில் மேலூர் அருகே அ.செட்டியார்பட்டி ஊராட்சி துவக்க பள்ளியில் 4ம் வகுப்பு பயிலும் மாணவி இஸ்பா டுஜானா முதலிடமும், அதே வகுப்பில் மாணவி யாகஸ்ரீ மூன்றாம் இடமும் பெற்றனர். இப்பள்ளிக்கு அருகே உள்ள அ.வல்லாளப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி 11 வகுப்பு மாணவர் சந்தோஷ், 17 வயது உட்பட்டோருக்கான ஆண்கள் பிரிவில் 2ம் இடமும், அதே பள்ளி மாணவிகள் சோலையம்மாள், கலைச்செல்வி ஆகியோரும் 2ம் இடமும் பெற்றனர்.

The post மேலூர் அருகே மாநில செஸ் போட்டிக்கு அரசு பள்ளி மாணவர்கள் தேர்வு appeared first on Dinakaran.

Related Stories: